விழுப்புரத்தில் ஜெயலலிதா நினைவு தினம்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

Update: 2021-12-05 08:00 GMT

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சி பகுதியில் வண்டிமேட்டில் நகர செயலாளர் ராமதாஸ் தலைமையிலும், காந்தி சிலை அருகே மாவட்ட மாணவர் அணி சக்திவேல் தலைமையிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது,

அதில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர், நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர், நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News