விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மணி வரை 44% வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மணி வரை 44% சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது;

Update: 2021-10-06 08:51 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் இன்று நண்பகல் 1மணி வரை 44 சதவீத வாக்குபதிவு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது, அதில் இன்று காலை 1 மணி வரை நடைபெற்ற வாக்கு சதவீதம், முகையூர் ஒன்றியத்தில் 36.61 சதவீதமும், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 43.40 சதவீதமும், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 45.96 சதவீதமும், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 42.13 சதவீதமும், ஒலக்கூர் ஒன்றியத்தில் 51.58 சதவீதமும், வானூர் ஒன்றியத்தில் 44.00 சதவீதமும், செஞ்சி ஒன்றியத்தில் 43.58 சதவீதமும் என மாவட்டத்தில் சராசரியாக இதுவரை 43.40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News