விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-16 14:50 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில்  புதியதாக,  18 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 45,162 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் உயிரிழப்பு இன்று ஏற்படவில்லை.
மாவட்டத்தில் இதுவரை 352 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று மட்டும் 17 பேர்  நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 44,595 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 214 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News