விழுப்புரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய மிட்டாய் கம்பெனிக்கு சீல்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க தவறிய மிட்டாய் கம்பெனிக்கு அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது

Update: 2021-06-04 16:22 GMT

விழுப்புரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய மிட்டாய் கம்பெனிக்கு சீல்

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் விவிஏ திருமணம் மண்டபம் அருகில் ஊரடங்கை மீறி அதிக ஆட்களை வைத்து இயங்கி வந்த மிட்டாய் கம்பெனி மற்றும்  திருவிக வீதியில் மரப்பொருட்கள் விற்பனையகம் ஆகியவை ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டதால்,  நகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

அதேபோல் மந்தகரை திடல் பகுதியில் இயங்கிய மீன் கடைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News