தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Speech Competition - விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2022-06-28 01:15 GMT

பரிசு பெற்ற மாணவர்கள்.

Speech Competition - தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி பேச்சு போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சத்தியப்பிரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News