விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம் அணை பகுதியில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது

Update: 2022-08-31 03:45 GMT

விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம் அணை பகுதியில் ஆட்சியர் த. மோகன் ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம் அணை பகுதியில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் கர்நாடக பகுதியில் இருந்து பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோரம் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு வருகிறது, இந்நிலையில் ஆட்சியர் மோகன் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கர்நாடக பகுதியில் இருந்து பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோரம் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு வருகிறது, இந்நிலையில் ஏனாதிமங்கலம் அருகே தென்பெண்ணை ஆற்றில் உள்ள எல்லீஸ்சத்திரம் தடுப்பணை அருகே கரை ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது, அதனால் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது, அந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டார்.

அதனை தடுக்கும் வகையில் உடனடியாக கரும் கற்களை கொண்டு தடுப்பு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் மோகன் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அப்போது மாவட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News