தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விழுப்புரம் நகராட்சி சார்பில் பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2021-10-11 16:17 GMT

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு வழங்கும் கலெக்டர் மோகன்

விழுப்புரம் நகராட்சி சார்பில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசு அறிவித்திருந்தனர், இன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு கலெக்டர் பரிசு பொருட்கள் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (10.10.2021)  நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் த.மோகன் பரிசுப்பொருட்களை இன்று (11.10.2021) வழங்கினார்.  மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி, நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News