விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

Update: 2022-01-26 06:25 GMT

குடியரசு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த கலெக்டர் மோகன் 

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள காவல்துறை மைதானத்தில்,இன்று குடியரசு தின விழா நடைபெற்றது,

விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கண்டார்,

அப்போது டிஐஜி, எஸ்பி, டிஆர்ஓ, பிஆர்ஓ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். விழாவில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 355 பேர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News