விழுப்புரம் அருகே பேக்கரி கடை தூக்கிட்டு ஊழியர் தற்கொலை

Villupuram News -விழுப்புரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பேக்கரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-16 05:14 GMT

விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் (பைல் படம்)

Villupuram News -விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதராஜ் மகன் ஜெகன் (வயது 27). இவர் காணையில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு பாக்யலட்சுமி என்ற பெண்ணுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெகன் கடந்த 4 மாதங்களாக அகரம்சித்தாமூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்து வந்தார். நேற்று முன்தினம் ஜெகன், குடிபோதையில் மனைவியுடன் சண்டையிட்டு தளவானூரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு வந்துவிட்டார்.

பின்னர் மனவேதனையில் இருந்த ஜெகன், மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஜெகன் இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News