விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 42 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Update: 2021-07-25 16:22 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 43,593 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இவர்களில் இன்று ஒருவர் உயிரிழப்பு,இதுவரை 340 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 42 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 42,813 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 485 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News