மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பலாத்காரம் செய்தவர் கைது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-08 13:33 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள  கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட மாணவி, ஊனமுற்றோர் பள்ளியில் படித்து வருகிறார். இவரை உறவினரான 26 வயது வாலிபர்  பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ ட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News