ஒய்க்காப் பள்ளியில் ஜே ஆர் சி கல்வி வளர்ச்சி தின கொண்டாட்டம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட முட்டத்தூர் ஒய் காப் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின கொண்டாட்டம் நடைபெற்றது.;
விழிப்புணர்வு பேரணி.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முட்டத்தூர் ஒய்க்காப்பள்ளி ஜே.ஆர்.சி சார்பில் நெகிழி விழிப்புணர்வு பேரணியுடன் கல்விவளர்ச்சி நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
முன்னாள் தமிழக முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் மற்றும் நெகிழி விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மஞ்சப்பை பயன்படுத்துவோம் என்ற பதாகைகளுடன் ஜூனியர் ரெட்கிராஸ் மற்றும் பள்ளி மாணவர்களுடன் பேரணியுடன் விழிப்புணர்வு நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் ஒய்.ஜாக்குலின் ஆசாத் தலைமையில் தாங்கினார்.
ஊராட்சி மன்றத் தலைவர் விஜியா அர்சுணன் பேரணியை துவக்கி வைத்தார். உதவி தலைமையாசிரியர்கள் பியூலா சித்ரா பால், டி.ஜேக்கப் ஜீவாந்தம், விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்டக் கன்வீனர் முனைவர் பாபு செல்லதுரை தலைமை தாங்கி நடத்தினார். முட்டத்தூரில் பள்ளியில் துவங்கிய பேரணி முக்கிய பகுதிகளில் சென்று பள்ளியிலேயே முடிவுற்றது. அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் அனைவரும் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செல்வக்குமார் மற்றும் பட்டதாரி வரலாற்று ஆசிரியர் பிரேம்ராஜ்குமார் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர்.