விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க பெயர் பலகை திறப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மாற்றுத்திறனாளிகள் சங்க பெயர் பலகை திறக்கப்பட்டது.

Update: 2021-09-28 11:31 GMT

மாற்று திறனாளிகள் சங்க பெயர் பலகை திறப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட டி.புதுபாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் மங்கை தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்தார், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் பஞ்சாயத்து கிளார்க் செந்தில், மாவட்ட துணை செயலாளர் நடராஜன், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News