நுண்நீர் பாசனதிட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டத்தில் பாரத பிரதமர் நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்

Update: 2021-08-04 14:17 GMT

மாவட்ட ஆட்சியர் மோகன்  விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்

பாரத பிரதமர் நுண் நீர் பாசன திட்டத்தின் கீழ் வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து வழங்கிய சிறு குறு விவசாய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி  விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி  தொடங்கி வைத்தார். அப்போது வருவாய் அலுவலர் ராஜசேகர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News