வானூர் அருகே சிபிஎம் சார்பில் நாற்று நடும் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே சிமெண்ட் சாலை வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-14 11:21 GMT

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே சிபிஎம் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டம்,நல்லாவூர் கிராமத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிமெண்ட் சாலை அமைக்க வலியுறுத்தி வட்டக்குழு உறுப்பினர் ஐ. சேகர் தலைமையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் எம்.கே.முருகன், வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். பாலமுருகன், வி. சுந்தரமூர்த்தி, கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News