அதிமுக 10 ஆண்டில் செய்யாததை 10 மாதத்தில் செய்து உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்

அதிமுக கடந்த 10 ஆண்டில் செய்யாததை 10 மாதத்தில் திமுக செய்து உள்ளது என முதல்வர் ஸ்டாலின் விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் கூறினார்

Update: 2022-04-05 14:29 GMT

பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்பில் நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட பெரிய கொழுவாரியில் மாவட்டத்தில் 5வது சமத்துவபுரமாக கடந்த 2010-2011 திமுக ஆட்சியில் 2.88 கோடி மதிப்பீட்டில் 100 வீடுகள் கொண்ட பெரியார் சமத்துவபுரம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது,

அதனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக கிடப்பில் போட்ட சமத்துவபுரத்தை, திமுக ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதத்தில் திறந்து உள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார், முன்னதாக முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக சார்பில் வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து பொது மக்கள் கொடுத்த மனுக்களை பெற்று கொண்டார், தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.24 கோடியே,77ஆயிரம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 38 அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார், 10 ஆயிரத்து,722 பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்பில் ரூ.42 கோடியே,69 லட்டத்து,98 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார்,

அதனை தொடர்ந்து திண்டிவனம் தொழிற்பேட்டைக்கு நேரில் சென்று அங்கு தனியார் நிறுவனம் மூலம் ரூ.500 கோடியில் அமைய உள்ள தோல் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்,

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, பெரிய கருப்பன், மஸ்தான், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன்,மணிகண்ணன், ஊராட்சி துறை தலைமை செயலர் அமுதா, ஆட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News