வானூர் அருகே புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம், வானூரில் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2021-06-16 12:26 GMT

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே திருசிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள ஹோண்டோ ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் பணியாற்றிய அஜய்  என்ற இளைஞர் மின்சாரம்   தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால்,  பெற்றோர்கள்  கொடுத்த புகாரை ஆரோவில் காவல்  நிலைய போலீசார் ஏற்க மறுத்ததால், அந்த காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.  

Tags:    

Similar News