வேளாண்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பொன்முடி வழங்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி வேளாண் துறை சார்பில் நலத்திட்டங்களை வழங்கினார்

Update: 2022-05-25 11:30 GMT

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூர் ஊராட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிளை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்ததையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூர் ஊராட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிளை வழங்கினார். நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, வேளாண் இணை இயக்குநர் ரமணா ஆகியோர் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News