பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

திருக்கோவிலூர் அருகே முகையூரில் நடந்த நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்

Update: 2021-08-07 13:57 GMT

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் பகுதியில் சமூக பாதுகாப்புத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இரண்டு மாதத்திற்கான ரூ.4000/- உதவித்தொகையினை உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன், ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News