திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி கட்டிடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பல்லரிபாளையம் கிராமத்தில் பள்ளி கூடுதல் கட்டிடத்தை திறந்து அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

Update: 2021-07-10 14:44 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி கட்டிடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர்,

இந்நிலையில் இன்று திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு  உட்பட்ட பல்லரிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து அங்கு கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார், அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணபிரியா உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News