விழுப்புரம் மாவட்டத்திற்கு சுகாதார துறை அமைச்சர் வருகை

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் பற்றி ஆய்வு செய்ய சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் வந்தார்.

Update: 2021-06-07 16:15 GMT

சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் குறித்து திடீர் ஆய்வு செய்தார், அப்போது மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மாவட்ட சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார், அப்போது அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் அண்ணாதுரை உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News