கொரோனா தடுப்பு ஊசி முகாமை துவக்கி வைத்த கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மோகன் துவக்கி வைத்தார்.

Update: 2021-10-23 08:00 GMT

கொரோனா தடுப்பூசி முகாம்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏனாதிமங்கலம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் மோகன் இன்று (23.10.2021) தொடங்கி வைத்தார். அப்போது ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News