திருவெண்ணெய்நல்லூர் அருகே அடகு கடைக்காரர் வீட்டில் திருட்டு

திருவெண்ணைநல்லூர் அருகே அடகு கடைக்காரர் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.;

Update: 2022-08-24 03:00 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே அடகு கடைக்காரர் வீட்டில் திருட்டு

பைல் படம்.

  • whatsapp icon

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 61). இவர் கோபாலபுரத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று  காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு தனது அடகு கடைக்கு சென்றுவிட்டு சாப்பிடுவதற்காக மீண்டும் மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிமூலம் உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது, அதில், வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை காணவில்லை.

ஆதிமூலம் அடகுக்கடைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News