விழுப்புரம் விவகாரம் - இருவர் கைது

பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவம்.

Update: 2021-05-15 12:48 GMT

விழுப்புரம் விவகாரத்தில் கலெக்டர், எஸ்பி நேரில் விசாரணை நடத்தி 50 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு செய்து இருவரை கைது செய்தனர்,

விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழா தொடர்பாக 3 முதியவர்களை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்ட விவகாரம் தமிழக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது,

இந்நிலையில் மாவட்ட  கலெக்டர் அண்ணாதுரை, எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர்  கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்,

காலில் விழ வைத்த சம்பவத்தில் 8 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்,

மற்றொரு தரப்பு கொடுத்த புகாரின் பேரில்  மக்கள் மீது பெயர் குறிப்பிட்ட 4 பேர் மற்றும் பெயர் குறிப்பிடபடாத 50 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News