மயிலம் தொகுதியில் சமூக வளைகாப்பு: அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் நடைபெறும் சமூக வளைகாப்பு நிகழ்ச்சியை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-15 12:31 GMT

மயிலம் அருகே நடைபெற்ற சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டணை தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் சீர்வரிசையினை வழங்கி வாழ்த்தினார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News