மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அமைச்சர் அடிக்கல்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

Update: 2021-06-17 17:49 GMT

விழுப்புரம் மாவட்டம், மைலம் தொகுதிக்கு உட்பட்ட வெங்கந்தூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அக்கிராம மக்கள் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி வேண்டி தமிழ்நாடு முதல்வரிடம் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து அரசு உத்தரவின்படி ரூ.21.45 இலட்சம் மதிப்பில் அறுபது ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

Tags:    

Similar News