செஞ்சியில் சூரிய ஒளி மின் கோபுர விளக்கு: அமைச்சர் இயக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரில் சூரிய ஒளியில் இயங்கும் 3 மின் கோபுர விளக்கு கம்பங்களை அமைச்சர் மஸ்தான் இயக்கி வைத்தார்

Update: 2021-07-27 07:34 GMT

சூரிய ஒளியில் எரியும் 3 எல்இடி. மின் கோபுர விளக்கு கம்பங்களை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

செஞ்சி நகரில் சூரிய ஒளியில் இயங்கும் 3 மின் கோபுர விளக்கு கம்பங்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்  இயக்கி வைத்தார்.

செஞ்சி பேரூராட்சி சார்பில் ரூ 8.50 லட்சம் மதிப்பில் சூரிய ஒளியில் எரியும் 3 எல்இடி. மின் கோபுர விளக்கு கம்பங்களை அமைச்சர் மஸ்தான் சிங்கவரம் சாலையில் ரூ 6 லட்சம் மதிப்பிலும், கிருஷ்ணர் கோயில் அருகில் 1.50 லட்சம் மதிப்பிலும், சந்தை தோப்பு பகுதியில் ரூ 1 லட்சம் மதிப்பிலும் சூரிய ஒளியில் இயங்கும் எல்.இ.டி.மின் விளக்கு கம்பங்களை இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின்போது பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன், பேரூராட்சி துப்புறவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News