இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: ஆர்டிஓ விசாரணை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இளம் பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் ஆர் டிஓ நேரில் விசாரணை;
இளம்பெண் தற்கொலை குறித்து சார் ஆட்சியர் விசாரணை நடத்துகிறார்
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட ஆலம்பூண்டியில் தற்கொலை செய்துகொண்ட அபிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார், அப்போது வட்டாட்சியர் பழனி மற்றும் மருத்துவ குழு ஆகியோர் உடனிருந்தனர்.