செஞ்சி குளமா? செஞ்சி பேருந்து நிலையமா?: பொதுமக்கள் சந்தேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையம் சிறு மழைக்கே குளமாக மாறிவிடுவதால், நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

Update: 2021-10-02 13:53 GMT

குளம் போன்று  காட்சியளிக்கும் செஞ்சி பேருந்து நிலையம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையம் சிறு,சிறு மழைக்கே குளமாக மாறி அதனுடன் கழிவுநீர் கலந்து பல நாட்கள் வடியாமல் துர்நாற்றம் வீசுவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. 

தற்போது பெய்த மழையில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியாத நிலையில்,  இன்னும் சில நாட்களில் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என  பொதுமக்கள், பேருந்து பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்த தொகுதி அமைச்சர் மஸ்தானின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News