அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் தேர்வு
Election of All India Democratic Women's Association
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வட்ட மாநாட்டில் 7 கிளைகளில் இருந்து 55 பெண்கள் கலந்து கொண்டனர், மாநாட்டில் தலைவராக பிரியாவும், செயளாளராக சங்கீதாவும், பொருளாளராக அமலாவும் உட்பட 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோன்று, மேல்மலையனூரில் நடந்த ஒன்றிய மாநாட்டில் 7 கிளைகளில் இருந்து 64 பெண்கள் கலந்து கொண்டனர். இதில் தலைவராக கர்லினாவும்,செயளாளராக இலக்கியலட்சுமியும், பொருளாளராக அஞ்சலையும் துணைத்தலைவராக முருவம்மாளும், துணைசெயலாளராக கவிதா உட்பட 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டனர், மாநாட்டில் மாநில துணைத்தலைவர் எஸ்.கீதா, மாவட்ட செயலாளர் எஸ்.சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.