மேல்மலையனூர் கோயிலில் நான்கு நாட்கள் தரிசனம் ரத்து

பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நான்கு நாட்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

Update: 2021-09-01 14:42 GMT

மேல்மலையனுர் அங்காளம்மன் கோவில் 

இந்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும்,  6-ம் தேதி அம்மாவாசை அன்று ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என கோவில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்  அறிவிப்பு வெளிட்டுள்ளார்.

Tags:    

Similar News