மேல்மலையனூரில் கொரோனா பரவும் அபாயம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவசையொட்டி மக்கள் அதிக அளவில் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் என கிராம மக்கள் அச்சம்

Update: 2021-07-10 02:02 GMT

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவசையொட்டி மக்கள் அதிக அளவில் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் 

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி ஆலயம், இங்கு அமாவாசை அன்று சிறப்பான பூஜை நடைபெறுவது வழக்கம்,இதை காண்பதற்கு தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்,

இந்நிலையில்  அமாவாசையன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து அங்காளம்மன் கோயிலில் கூட்டம் அலைமோதியது. இதனைப் பார்த்த கிராமத்தினர்,கொரோனா நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்படுமோ என  அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

Similar News