மேல்மலையனூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டது.;
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நாளை 9.07.21 அன்று அமாவாசை தினத்தன்று நடக்கும் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாகவும், அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை பொது சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு அறிவித்துள்ளார்.மேலும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பேருந்து இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.