செஞ்சி பகுதியில் உள்ள மனநல காப்பகத்திற்கு அமைச்சர் உதவி

செஞ்சி பகுதியில் இயங்கி வரும் மனநல காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

Update: 2021-06-02 15:04 GMT

செஞ்சி பகுதியில் இயங்கி வரும் மனநல காப்பகத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் வட்டம்,துறிஞ்சம்பூண்டி கிராமத்தில் குளினி அடைக்கல அபய  மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மன நலம் பாதிக்கப்பட்டோர் 120 பேர் தங்கி உள்ளனர்

கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு இந்த காப்பகத்துக்கு உதவிடும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான  5 மூட்டை அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் காப்பகத்தின் நிர்வாகி ஜாஸ்மினிடம் வழங்கினார். 

Tags:    

Similar News