பள்ளிகொண்டா அருகே கார் மோதி தொழிலாளி பலி

பள்ளிகொண்டா அருகே கார் மோதி தொழிலாளி பலி; மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

Update: 2021-09-13 16:20 GMT

பள்ளிகொண்டா அருகே மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி கிராமத்தை சேர்ந்தவர் துரை ( 52 ). பீடித் தொழிலாளி.இவர் இன்று காலை பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை கந்தனேரி கூட்ரோட்டில் சாலையை கடந்தார்.

அப்போது ஆம்பூர் பகுதியில் இருந்து வேலூர் நோக்கி வந்த கார், துரை மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் அங்கேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கந்தனேரி கூட்ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், அங்கு உடனே மேம்பாலம் அமைக்கவேண்டும் எனக்கோரி கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

Tags:    

Similar News