புத்தாண்டில் இருளர் சமூகத்தினருக்கு நல உதவி வழங்கிய டிஎஸ்பி

கரைபூண்டி கிராமத்தில் இருளர் சமூகத்தினருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் பல்வேறு நல உதவிகளை வழங்கினார்

Update: 2022-01-02 06:02 GMT

இருளர் சமூகத்தினருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் பல்வேறு நல உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கரைபூண்டி கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.புத்தாண்டையொட்டி இவர்களின் குழந்தைகளுக்கு போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் புத்தாடை , இனிப்பு , முக கவசம் , கிருமிநாசினி , உணவு ஆகியவைகளை வழங்கினார்.

காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News