பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-08 01:32 GMT

கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி வேங்கிக்கால், அடி அண்ணாமலை, நல்லவன்பாளையம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோல, கலசப்பாக்கம், வந்தவாசி, ஆரணி, மற்றும்   மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

 இதன்  காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Tags:    

Similar News