திருவண்ணாமலை கலெக்டரின் கொரோனா தடுப்பூசி தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவண்ணாமலை கலெக்டர் இன்று பேருந்து நிலையம் பகுதியில் கொரோனா தடுப்பூசி தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்;

Update: 2021-08-04 12:29 GMT

முகக்கவசம் இன்றி வந்தவர்களுக்கு கலெக்டர் முகக்கவசம் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கொரோனா  தடுப்பூசி தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இன்று பேருந்து நிலையம் அருகில் இது சக்கரம், நான்கு சக்கரம் வாகனங்களில் வரும் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறினார். மேலும் பேருந்துகளில் பயணம் செய்பவர்களிடம் முக கவசத்தின் அவசியத்தையும்  சமூக இடைவெளியையும் தடுப்பூசியின் பயன்களையும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News