காங்கயம் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

காங்கயம் பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-17 13:25 GMT

காங்கயம் பகுதியில் மின் பராமரிப்பு காரணமாக நாளை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்து உள்ளதாவது:- காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை டிச.,18 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.

இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காங்கயம், திருப்பூர் சாலை, கோவை சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர் ஆகிய பகுதிகள்.

சிவன்மலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டிஆர்.பாளையம், ஜிவிபாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோஸ்கார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம் ஆகிய பகுதிகள்.

ஆலாம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தகாட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி,மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது, என தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News