தாராபுரம் அருகே இன்ஜி., கல்லூரி மாணவர் தற்கொலையா?

தாராபுரம் அருகே இன்ஜி., கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-02 13:42 GMT

பைல் படம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேல்கரைப்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சூரியகுமார் 21. இவர், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் கல்லூரியில் 4 ம் ஆண்டு ஆன்லைன் மூலம் படித்து வந்தார். இந்நிலையில், தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தில் வசிக்கும் தனது அத்தை மீனாட்சி அம்மாள் வீட்டுக்கு வந்திருந்தார். மாணவனை திடீரென காணவில்லை. உறவினர்கள் தேடி பார்த்தபோது, கிணற்றில் அருகே மாணவனின் செருப்பு இருந்தது கண்டு, தாராபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் பேரில் தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் தேடி பார்த்தனர். அப்போது மாணவனின் உடல் கிணற்றுக்குள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து மாணவனின் உடலை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News