வாணியம்பாடி அருகே பாலாற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியில் பாலாற்றில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மூவரை கைது செய்த போலீசார்

Update: 2021-08-22 13:06 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளுடன் மணல் கடத்திய மூவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வாணியம்பாடி கிராமிய போலீஸார் கிரிசமுத்திரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் பாலாற்றில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (வயது 35), ஜெயராமன் (வயது27),  சாந்தி வீரன் (வயது 20) ஆகிய 3 பேரை கைது செய்து மாட்டு வண்டியும் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News