வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் சடலமாக மீட்பு

வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு. போலீசார் விசாரணை

Update: 2021-06-20 09:04 GMT

வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் சடலமாக மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர்,  உமர்நகர் பகுதியில் ஷாகிதா (வயது 40) என்ற பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து அவரது மகள் சித்திகா உடன் வசித்து வருகிறார்

அவரது மகள் பணிப்பெண்ணாக வாணியம்பாடி பகுதியில் வேலை செய்து வருகிறார்.  நேற்று வேலைக்கு சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியதால் பணிக்கு சென்ற இடத்திலேயே உறங்கி உள்ளார். இந்நிலையில் இவரது தாயார் ஷாகிதா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  இன்று காலை அவரது மகள் வந்து பார்த்தபோது தாயார் நிர்வாணமான நிலையில்,  காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்

இதனை கண்ட அவரது மகள் கதறி அழுவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து,  வாணியம்பாடி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த நகர காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் அவர் வீட்டில் இருந்த கட்டில் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு ரவருகின்றனர்.

Tags:    

Similar News