வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்
வாணியம்பாடியில் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 61 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல்;
பறிமுதல் செய்த பணத்தை வாணியம்பாடி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணையாளருமான ஸ்டாலின் பாபுவிடம் ஒப்படைத்தனர்
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி 61500 ரூபாய் இருந்தது தெரியவந்தது
தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் திருப்பத்தூர் அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பதும் தெரிந்தது. அதனைத் தொடர்ந்து ரூபாய் 61 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்து வாணியம்பாடி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணையாளருமான ஸ்டாலின் பாபுவிடம் ஒப்படைத்தனர்