மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்: வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்

வாணியம்பாடி இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்

Update: 2022-01-03 15:30 GMT

வாணியம்பாடி இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்து மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.பசுபதி  தலைமை வகித்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News