உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் போராட்டம்

ஒப்புதல் சான்றிதழ் கொடுக்க அலைக்கழிப்பதாக கூறி உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் போராட்டம் நடத்தினார்

Update: 2022-03-09 12:30 GMT

உதயேந்திரம் பேரூராட்சி அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் வசித்து வருபவர் ஷகீல் அஹமத்.இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை பிரிவு போட்டுள்ளார். இதற்காக கடந்த 2019ம் ஆண்டு வீட்டுமனை விற்பனை செய்ய உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் முறையாக அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.

பேரூராட்சி செயல் அலுவலர் மனை பிரிவு நிபந்தனை குறித்து தகவல் ஏதும் கொடுக்காமல், விதிகளை வாய்மொழி உத்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஷகீல் அஹமத் வீட்டு மனை அமைந்துள்ள இடத்தில் சாலை அமைத்தல், மின்சார கம்பங்களுக்கு மின் வாரியத்தில் பணம் செலுத்தியுள்ளார். 

இன்று செயல் அலுவலரை பார்க்க வந்த போது அவர் அலுவலகத்தில் இல்லாததால் அலுவலக ஊழியரை சந்தித்து போது, அவர் வீட்டு மனை அமைய உள்ள இடத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒப்புதல் கடிதம் வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.

இதனை கேட்ட ஷகீல் அஹமத் கடந்த மூன்று வருடங்களாக ஒப்புதல் சான்றிதழ் கொடுக்க அலைக்கழிப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்னர்  பேரூராட்சி அலுவலகம் நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News