மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்

Update: 2021-11-30 16:47 GMT

வாணியம்பாடியில் பாஜக நடத்திய போராட்டம் 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு  குறைத்தும் மாநில அரசு விலை குறைப்பை நடைமுறைபடுத்தாததை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் பாஜக  மனித சங்கிலி போராட்டம் நடத்தியது.

போராட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News