வாணியம்பாடி அருகே பாலாற்றில் வெள்ளபெருக்கு.

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளபெருக்கு.

Update: 2021-09-21 12:45 GMT

கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகிலுள்ள தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் தற்போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்த வெள்ளப்பெருக்கு திம்மாம்பேட்டை, ஆவாரம்குப்பம், அம்பல்லூர், கொடையாஞ்சி வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் செல்லக்கூடிய பாலாற்றில் வெள்ளநீர் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News