வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டரூ. 7 லட்சத்து 10 ஆயிரத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

Update: 2022-02-08 09:45 GMT

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும்படையினர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என கண்காணிக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து கண்காணித்து வருகிறது.

இதில் அம்பூர்பேட்டை பகுதியில்  தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையின் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த  வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர் உரிய ஆவணங்களின்றி 7 லட்சத்தி 10 ஆயிரம்  ரூபாய்  பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது  பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்,  வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்

Tags:    

Similar News