திருப்பத்தூர் அருகே வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருப்பத்தூர் அருகே புளியந்தோப்பில்  வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு. கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை

Update: 2021-07-03 16:47 GMT

திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி கூலித் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் நல்லரசு (வயது22) இவர் நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள புளியந்தோப்பில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் கலந்து கொள்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்

அப்போது மழையின் காரணமாக நண்பர்கள் அனைவரும் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.  ஆனால் நல்லரசு மட்டும் அங்கேயே அமர்ந்து தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் என நண்பர்கள் தெரிவித்தனர்.  அதனைத் தொடர்ந்து நல்லரசு வீட்டுக்குத் திரும்பவில்லை.

இந்த நிலையில்  அவ்வழியாகச் சென்ற  அக்கம் பக்கத்தினர் நல்லரசு தூக்கிட்டு  உடல் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நல்லரசு உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகப்பட்ட போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா? என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவருடைய போனில் யார் யார் பேசியுள்ளனர் மற்றும் அவருடைய நண்பர்களை இடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News