திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் இன்று பொறுப்பேற்றார்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி இன்று பொறுப்பேற்று கொண்டார்

Update: 2021-06-10 13:30 GMT

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி இன்று பொறுப்பேற்று கொண்டார்

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டதால், திருப்பத்தூர் தனி மாவட்டமாக உதயமானது.  திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக டாக்டர் விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டு ஒன்றரை ஆண்டு பணி செய்து வந்தார்

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.  அவருக்கு பதிலாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு, சென்னையில் சிபிசிஐடி பிரிவில் பணியாற்றிவந்த சிபி சக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்

அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்தித்து பேசிய சிபி சக்கரவர்த்தி தற்போது கொரோனா தொற்றுள்ளதால் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,  கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News